ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : “காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு.”
ஜோ : “சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.”
தபால்காரர் (ஜோவிடம்) : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
ஜோ : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”
நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
ஜோ : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”
*****
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.